ராமநாதபுரம்,அக்.29:-

ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில் வர்ம அடிமுறை பயிற்சி முகாம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர் வர்மம் சார்ந்த புள்ளிகள், அடிமுறை சுவடு முறைகளை மாணவர்கள் கற்றனர். மாணவர்களுக்கு கரூர் மாவட்டத்தில் இருந்து அடிமுறை ஆசான் திருமூர்த்தி அவர்கள் பயிற்சி கொடுத்தார் இப்பயிற்சி முகாமில் வனத்துறை அலுவலர் அருண்குமார் மற்றும் சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் பயிற்சியாளர் செல்லபாண்டி,ஆகியோர் தலைமை தாங்கினர் இறுதியில்  கற்றுக் கொண்ட அடிமுறை சுவடுகளை செய்து காட்டினர் மாணவர்களுக்கு பயிற்சி பெற்றதுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *