ராமநாதபுரம்,ஜன.6:-
தி.மு.க துணை பொது செயலாளர் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பொறியாளர் கா.மருதுபாண்டி ஏற்பாட்டில் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.நகர சபை தலைவரும்,வடக்கு நகர செயலாளருமான ஆர்.கே.கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் இரா.பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் காளிதாஸ்,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் முகனேஷ்வரன்,அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஆர்.பி.கார்த்திகேயன், பழ.பிரதீப்,மற்றும் பேச்சி முத்து, வீரக்குமார்,மணிவண்ணன்,பாசித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.