இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
இராமநாதபுரம் மாவட்டம்,சாயல்குடி பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாற்றுத்திறனாளி வியாபாரியிடம் பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் கண்ணியக்குறைவான முறையில் நடந்து கொண்டதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிற்க்கிணங்க இன்று சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மா.சேகரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.