ஒவ்வொரு கவுன்சிலருக்கும் 10 லட்சம் 20 லட்சம் கொடுத்து சேர்மன் ஆயிருக்கேன் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் செலவழிச்சு இருக்கேன் தி.மு.க கீழக்கரை சேர்மன் செஹானஸ் ஆபிதா ஆதங்கம்.கவுன்சிலர்களுக்கு பணம் கொடுத்து தான் சேர்மன் ஆனேன் என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார் கீழக்கரை திமுக சேர்மன் செஹானஸ் ஆபிதா.இவர் மீது நடவடிக்கை எடுத்து சேர்மன் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை வலுத்து வருகிறது.
கமிஷன் பிரிப்பதில் கீழக்கரை தி.மு.க சேர்மன் மற்றும் கவுன்சிலர்களிடையே மோதல்
நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் அறையில் நடந்த கமிஷன் சண்டை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தை திருடி பங்கு போட்டு கமிஷன் பிரிப்பதில் யாருக்கு நெருடலாக இருந்ததோ வீடியோ எடுத்து கீழக்கரை சேர்மன் செஹானஸ் ஆபிதாவை சந்தி சிரிக்க வைத்து விட்டனர்.