ராமேஸ்வரம்,செப்.08:-

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் சத்யா நகரை சேர்ந்தவர் டோர்ஜோ லியோன்.
இவர் அப்துல் கலாம் தேசிய நினைவகம் அருகே ரிசார்ட் வைத்து நடத்தி வருகிறார்.

அவருடைய ரிசார்ட்க்கு உயர் மின்னழுத்த மின்கம்பிகள் மாற்றுவது குறித்து ராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த வாரம் விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில் உயர் மின் அழுத்த கம்பிகள் மாற்றி கொடுப்பது தொடர்பாக தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ராமேஸ்வரம் உதவி பொறியாளர் ரூபாய் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து டோர்ஜோ லியோன் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து இன்று மாலை ராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள வணிக ஆய்வாளர் அருள் சகாய டார்ஜனிடம் டோர்ஜோ லியோன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும் போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வணிக ஆய்வாளர் அருள் சகாய டார்ஜனை கையும் காலமாக பிடித்து அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *