![](https://pulanaivuexpress.com/wp-content/uploads/2022/06/IMG-20220626-WA0181.jpg)
![](https://pulanaivuexpress.com/wp-content/uploads/2022/06/IMG-20220626-WA0180.jpg)
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெரியபட்டினம் நகர் சார்பாக மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு நடத்தும் “மக்கள் சங்கமம்” மாநாடு வருகின்ற ஜூன் 30, மற்றும் ஜூலை 1 அன்று பெரியபட்டினம் தர்ஹா திடலில் நடைபெற உள்ளது.அதன் ஒரு பகுதியாக இன்று காலை 6 மணி அளவில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.மாரத்தான் போட்டியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது ரசின் கொடியசைத்து துவங்கி வைத்தார்கள்.
![](https://pulanaivuexpress.com/wp-content/uploads/2022/06/IMG-20220626-WA0179.jpg)
![](https://pulanaivuexpress.com/wp-content/uploads/2022/06/IMG-20220626-WA0178.jpg)
பெரியப்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிலையத்தில் தொடங்கி முத்துப்பேட்டை,சேது நகர், மங்கம்மா சாலை வழியாக மீண்டும் பெரியபட்டினம் பேருந்து நிலையத்திற்கு வர வேண்டிய போட்டியின் தொலைவான 7 கிலோமீட்டர் தூரத்தை கலந்து கொண்ட மொத்தம் 200 நபர்களில் முதல் இடத்தை ஆசிப்,இரண்டாம் இடத்தை யூசுப்,மூன்றாம் இடத்தை மைதீன்,பெற்றனர்.இந்த மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகின்ற 1-ம் தேதி நடக்கின்ற மிகப்பெரிய மக்கள் சங்கமம் மாநாட்டில் பரிசு வழங்கப்படும்.மேலும் மாரத்தான் ஓட்டத்தை முழுமையாக நிறைவு செய்த 103 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
![](https://pulanaivuexpress.com/wp-content/uploads/2022/06/IMG-20220626-WA0177.jpg)