கீழக்கரை வட்டாட்சியர் சரவணன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை இன்று 15/06/2022 காலை 11 மணியளவில் கீழக்கரை வட்டாட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்றது.

கீழக்கரை நகராட்சி ஆணையர் செல்வராஜ் நகராட்சி பொறியாளர் மீரான் கீழக்கரை ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் 18 சாதி சமுதாய சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.‌

அமைதிப் பேச்சுவார்த்தையில் மக்கள் எழுப்பிய எதிர்ப்புக் கருத்துக்களை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிப்பதாக கீழக்கரை வட்டாட்சியர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்‌‌‌.இக்கூட்டத்தில் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

18 இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாகக் கூடினர் ஒட்டுமொத்த இந்து மக்களும் எதிர்க்கும் மின்மயான திட்டத்தை செயல்படுத்த ஏன் அரசு அதிகாரிகள் துடிக்கிறார்கள் இதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் மின் மயானத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதியை கீழக்கரை நகராட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்தலாமே என்று ஆவேசத்துடன் மக்கள் பேசினர்.

செய்தியாளர்கள்:முஹம்மது பரூஸ்,சீனி இப்ராஹிம்.

ஒளிப்பதிவாளர்:முகம்மது நிசார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *