இராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட தென்னம்பிள்ளை வலசை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மயூரநாதசுவாமி மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.தென்னம்பிள்ளைவலசை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீ குகஸ்ரீ ஏகானந்தம் சுவாமிகள் சென்னை போரூரில் ஜோதிடராக பணிசெய்து பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அடிமையாக (மானசீக சீடராக) வாழ்ந்தவர்.ஆயுட்காலத்தில் தன்சொந்த கிராமத்தில் தன் குருநாத சுவாமிக்கு அருள்மிகு ஸ்ரீ மயூரநாத சுவாமி காட்சி அருளிய வரலாற்றுச் சம்பவத்தினை மறு ஆலயம் அமைக்க எண்ணி ரெத்னா பில்டர்ஸ் உரிமையாளரும், பொறியாளருமான  பால்பாண்டியனிடம் ஒப்படைத்தார். பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமியின் அடிமையாகவும், வாக்குச்சித்தராகவும் திகழ்ந்த ஸ்ரீ குகஸ்ரீ ஏகானந்தம் சுவாமிகள் 9.01.2018 ல் தன் சொந்த கிராமத்தில் (தென்னம்பிள்ளைவலசை) ஜீவசமாதி அடைந்ததை முன்னிட்டு,அவருடைய கனவையும்,நினைவையும் நிறைவேற்றும் விதமாக ரெத்னா பில்டர்ஸ் உரிமையாளர் சுவாமிகளின் சொந்த இடத்தில் மீதமுள்ள ஆலய கட்டிடப் பணியினை தான் சொந்த முயற்சியில் கட்டிமுடித்து ஆலய வழிபாட்டினை சுற்றுவட்டார அனைத்து பொதுமக்களும் வழிபடும் வகையில் பரிவார தெய்வங்களின் ஆலயங்களையும் தானே முன்வந்து இப்பணியை செய்து முடித்துள்ளார்.நிகழும் சுபமங்களகரமான சுபஸ்ரீ பிலவ வருடம் ஐப்பசி மாதம் 7-ம் நாள் (24.10.2021) ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதியும்,ரோகினி நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை 10.00 மணிக்குமேல் 11.00 மணிக்குள் தனுசு லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி,ஸ்ரீ மயூரநாத சுவாமி சமேத ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்.ஸ்ரீ மீனாட்சி சமேத சோமசுந்தரரேஸ்வரர்,ஸ்ரீ தட்சிணாமூர்த்தி,ஸ்ரீ துர்க்கை,ஸ்ரீ பெருமாள்,ஸ்ரீ ஆஞ்சநேயர்,நவ கிரகங்கள் மற்றும் ஸ்ரீ கால பைரவர் ஆலயங்களின் மகாகும்பாபிஷேகம் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி சிறப்பாக நடைபெற உள்ளது.அவ்வமயம் பக்தகோடிகள்,சுற்றுவட்டார கிராம பொதுமக்கள்,ஸ்ரீ குகஸ்ரீ ஏகானந்தம் சுவாமிகளின் உறவினர்கள்,பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் சீடர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து ஸ்ரீ மயூரநாதர் சமேத ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களின் அருளாசியினை பொதுமக்கள் பக்தகோடிகள் பெற்றுச் சென்றனர். இந்த மகா கும்பாபிஷேகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி,முன்னாள் எம்.பி அன்வர்ராஜா,அதிமுக அம்மா பேரவை மாவட்ட துணைச்செயலாளரும்,மண்டபம் ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஜி.மருதுபாண்டியன்,தேசிய கயிறு வாரிய தலைவர் குப்புராமு,தெய்வீக திருப்பணியில் ரெத்னா பில்டர்ஸ் ரெத்தினம்,பால்பாண்டியன் குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *