இராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் M.நிஜாம் முகைதீன் அவர்கள் தலைமையில் இன்று(29/8/2021) பரூக் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நிர்வாக வசதிக்காக இராமநாதபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் தொகுதிகளை உள்ளடக்கி மேற்கு மாவட்டமாகவும்,இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதிகளை உள்ளடக்கி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டமாகவும் செயல்படும்.
இக்கூட்டத்தில் வரும் மூன்று ஆண்டுகளுக்கான மாவட்ட நிர்வாகிகள் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட மாவட்ட நிர்வாகிகள்.
கிழக்குமாவட்ட தலைவர் ரியாஸ் கான் மாவட்ட துணைத்தலைவர் சோமுமாவட்ட பொதுச்செயலாளர் ஜமீல்மாவட்ட பொருளாளர் ஹசன் அலிமாவட்ட செயலாளர்கள் அபுல் கலாம் ஆசாத் மற்றும் நஜிமுத்தீன்செயற்குழு உறுப்பினர்களாக நூர் ஜியாவுதீன், முகம்மது சுலைமான் மற்றும் முஹம்மது ஹனீப் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மேற்குமாவட்ட தலைவர் N.K.S பரக்கத்துல்லாஹ்மாவட்ட துணைத்தலைவர் மீரான் மைதீன் மாவட்ட பொதுச்செயலாளர் நூருல் அமீன் மாவட்ட பொருளாளர் ஹமீது சுல்த்தான் மாவட்ட செயலாளர் சாயல் நசீர்,செயற்குழு உறுப்பினர்களாக சுல்த்தான் அலாவுதீன், அப்துல்லாஹ் சேட் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மதுரை மண்டல சமூக ஊடக அணி பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் வாழ்த்து தெரிவித்தார்.