இராமநாதபுரம்,அக்.11:-
திருவாடானை ஊரக வளர்ச்சி அமைச்சுப் பணியாளர் சங்கம் திருவாடானை ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் திரு.ஐயப்பன் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 15-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர்,தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு.ரவி அவர்கள் போராட்டம் தொடர்பாக பேருரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகளான திருவாடானை சித்திரா,நெய்வயல் சுவைக்கீன், நாகினி,சங்கையா,ஓரியூர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவர்கள்,தூய்மைப் பணியாளர்கள் தூய்மை காவலர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் முருகேசன் அவர்களும் ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை அவர்களும் ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி அஞ்சுகோட்டை முனீஸ்வரன் அவர்களும் அவர்களும் மாவட்ட துணைத்தலைவர் பாண்டி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் திருவாடானை ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சி செயலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர். வருகின்ற 18-ஆம் தேதி நடைபெற உள்ள கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  குறித்தும் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள ஐந்து கட்ட போராட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.இறுதியாக ஒன்றிய பொருளாளர் வள்ளி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *