இரு சக்கர மோட்டார் வாகனத்தை இயக்கும் இளைஞர்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வேண்டு கோள் விடுத்துள்ளார் இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணம் மேல் நெய்னா தெருவை சேர்ந்த இம்ரான் , மற்றும் அவரது கூட்டாளி நேற்று மாலை நேரத்தில் பைபாஸ் ரோட்டில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் அதி வேகத்தில் சென்றுள்ளனர் எதிர் பாராத விதமாக விபத்து குள்ளாகி இம்ரான் உயிரிழந்துள்ளார். என்கிற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது .மேலும் ஓருவருக்கு படு காயம் ஏற்பட்டதால் மருத்துவ மனையில் அனுமத்திக்கபட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன .

இம்ரானை இழந்து வாடும் அவரது கும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக தெரிவித்து கொள்கிறோம் . தமிழகத்தில் இரு சக்கர மோட்டார் வாகன விபத்தில் அதிகமாக இளைஞர்கள் மரணம் தொடர்ந்த வண்ணமாக உள்ளன . ஆகவே பெற்றோர்கள் பங்களுக்கு இரு சக்கர மோட்டார் வாகனங்கள் வாங்கி கொடுப்பதை பெரும் பாலும் தவிர்ப்பது நல்லது .

எனவே : இரு சக்கர மோட்டார் வாகனத்தை இயக்கும் இளைஞர்கள் அதி வேகம் செல்லாமல் மிகவும் பாதுகாப்பாகவும் கவனமாகவும் செல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு இக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *