தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அந்தந்த யூனியனுக்குட்பட்ட ஊராட்சி அலுவலகங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.மேற்கண்ட பணிகளை இராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத் துறையினர் திறம்பட செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 7-வது கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்றத் தலைவர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது.மருத்துவர் சௌந்தர்யா பொதுமக்களை உடல் பரிசோதனை செய்து கொரோனா தடுப்பூசி செலுத்தினார்.ஊராட்சி செயலாளர் முத்துராமலிங்கம் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.ஊராட்சி முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.