இராமநாதபுரம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.அத்துடன் மாவட்டத்தில் இந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது போகம் விளைச்சல் நடைபெற்று உள்ளது. மாவட்டத்தைப் பொறுத்தவரை குடிநீருக்காக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் மாவட்டம் முழுவதும் சரியான முறையில் குடிநீர் கிடைக்கவில்லை.
மழை பெய்தால் மட்டுமே ஒரு போகம் விளையக்கூடிய நிலையில் விவசாயத்தின் நிலைமை மிக மோசமாக உள்ளது மேலும் இம்மாவட்டத்தின் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை தேடி செல்கின்றனர் கிராமங்களில் வயதான முதியவர்கள் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் சுத்தமாக கிடைக்காமல் போய் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் கிடைப்பது மிகவும் அரிதாகி விடும் எனவே மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் வைகை அணையில் இன்று முழு கொள்ளளவை எட்டி விட்ட நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உரிய பங்கு தண்ணீரை அரசிடம் பெற்று விவசாயத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தனர். அப்போது மாவட்ட செயலாளர் அக்கீமுடன் இராமநாதபுரம் நகர செயலாளர் வெங்கடேசன், மண்டபம் ஒன்றிய செயலாளர் பனைக்குளம் ராவுத்தர் கனி ஆகியோர் உடன் இருந்தனர்.