🎯 இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் விதமாக 25.03.2021-ம் தேதி முதல் பாதுகாப்பு பணியில் இருந்த கீழக்கரை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.முருகேசன் அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கொரோனா தொற்று உறுதியான நிலையில், காவலர்கள் திரு.கோட்டைகண்ணன், திரு.நீதிராஜன், திரு.சேகர் மற்றும் திரு.வசந்த் ஆகியோர் உதவியுடன் 19.05.2021-ம் தேதி இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
🎯 தொடர் சிகிச்சையில் இருந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு.முருகேசன் அவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் நாடி துடிப்பு குறைய தொடங்கியதை அறிந்த இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருE.கார்த்திக்.IPS., அவர்கள் துணை கண்காணிப்பாளரின் மீது தனி கவனம் செலுத்தி தனிப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.உதயகுமார் மற்றும் தலைமை காவலர் திரு.சிவசுப்பிரமணியன் ஆகியோர் ஏற்பாட்டில் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்கள். இதனை தொடர்ந்து 07.06.2021-ம் தேதி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.முருகேசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.
🎯 மேலும், துணைக் காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று இருந்தும், மன தைரியத்துடன் பாதுகாப்பு முறையை கடைபிடித்து சீரிய முறையில் பணியாற்றி அவருக்கு உதவியாக இருந்த காவலர்கள் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர் திருமதி.ரஜப் நிஷா மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் திரு.தயாநிதி ஆகியோருக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்.