பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து,இராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமையல் எரிவாயு பெட்ரோல் டீசல் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதைக் கண்டித்து இராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் டி.எம்.எஸ்.கோபி தலைமையில் சேவாதள தலைவர் காருகுடி சேகர், பாலகிருஷ்ணன்,காவனூர் கருப்பையா ஆகியோர் முன்னிலையில் இராமநாதபுரம் ரோமன் சர்ச் அருகே உள்ள பெட்ரோல் டீசல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளர் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் பினுலால் சிங், மாநிலச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசின் விலைவாசி உயர்வு மற்றும் சமையல் எரிவாயு பெட்ரோல்,டீசல் உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்,செய்தி தொடர்பாளர் கௌசி மஹாலிங்கம், இளைஞரணி மோதிலால் நேரு, ஓ.பி.சி அணி ஆசீர் ஆபிரகாம்,பாபு, இந்திய தேசிய காங்கிரஸ் கார்த்திக், சேகர்,வழக்கறிஞர் சரிபு,தினேஷ் ராஜ் உட்பட ஏராளமானோர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.இதேபோல் வட்டார அளவில் மற்றும் ஒன்றிய அளவில் இராமநாதபுரத்தில் மொத்தம் 21 இடங்களில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட அளவில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.