மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் காயல் நகர இளைஞரணி பொறுப்பாளர்களை நியமித்து மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில இளைஞரணி துனை செயலாளர் ஏ. இபுறாஹிம் அவர்களின் பரிந்துரையின் படி தூத்துக்குடி மாவட்டம் , காயல் பட்டிணம், சிதாக்காதி நகரை சேர்ந்த செய்யது முகமது புஹாரி காயல் நகர இளைஞரணி தலைவராகவும் , காட்டு மொஹதூம் பள்ளியை சேர்ந்த முத்து புஹாரி காயல் நகர இளைஞரணி செயலாளராகவும், சிதாக்காதி நகரை சேர்ந்த முகமது அஜ்மல் காயல் நகர பொருளாளராகவும் , காட்டு மொஹதூம் பள்ளியை சேர்ந்த முகமது ஜீன்னா காயல் நகர இளைஞரணி துனை செயலாளராகவும் , இன்று 24-02-2022 முதல் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் இளைஞரணி பொறுப்பாளராக நியமிக்கபட்டுள்ளார்கள். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் தாங்கள் பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அனைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .

மேலும் காயல் பட்டிணம் நகர இளைஞரணி பொறுப்பாளராக நியமிக்க பட்டுள்ள செய்யது முகமது புஹாரி , முத்து புஹாரி, முகமது அஜ்மல், முகமது ஜீன்னா ஆகியவோர்களுக்கு கட்சியின் நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *