இராமநாதபுரம், பிப்.11:-
கீழக்கரை 6-வது வார்டில் நீண்டநாள் பிரச்சனையான கழிவுநீரை வெளியேற்ற வாறுகால் வசதி ஏற்படுத்தப்படும் என வேட்பாளர் வஹிதா பேகம் உறுதி அளித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கடந்த 2004ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.தற்போது கீழக்கரை நகராட்சியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 110 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
வார்டு 6-ல் அதிமுக வேட்பாளராக வஹிதா பேகம் களம் இறங்குகிறார். ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இருந்த போது கிழக்கு தெரு பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு இருந்தது.தற்போது ஆட்சி மாற்றம் காரணமாக சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது பேவர் பிளாக் சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது.அதை சரி செய்கிறோம் என்ற பெயரில் பணியாளர்கள் பேவர் பிளாக் கற்களை பெயர்த்து வருவதால் சாலைகளுக்கு கீழ் இருக்கும் கழிவுநீர் குழாய்கள் சேதமடைந்து தெருக்கள்தோறும் கழிவுநீர் வெளியேறியபடி உள்ளது. அப்பகுதியில் பள்ளிக்கூடம் இருப்பதால் தினந்தோரும் சாலையைப் பயன்படுத்தும் மாணவர்களும்,பொதுமக்களும் துர்நாற்றம் காரணமாக கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் வெற்றிபெற்றால் அப்பகுதியில் முறையாக வாறுகால் வசதி ஏற்படுத்தி கழிவு நீரை சாலையில் தேங்க விடாமல் அப்புறப்படுத்துவதாக வேட்பாளர் வஹிதா பேகம் உறுதியளித்தார்.
6-வது வார்டின் வெற்றி வேட்பாளராக வலம் வரும் அவரை பொதுமக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு அவர் கேட்டுக்கொள்கிறார்.
