கீழக்கரை,பிப்.06:-
கீழக்கரை நகராட்சி தேர்தலில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றார்கள்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் ஹாமீது இபுராஹீம் கூறியதாவது:-
இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதின் நோக்கம் முற்றிலும் கீழக்கரை நகரை மேம்படுத்த வேண்டும் என்பதே எங்கள் குறிகோள் ஆகும்.கடந்த காலங்களில் இருந்த மக்கள் பிரதிநிதிகளால் இந்த நகர் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.குறிப்பாக இந்த நகர் இன்று வரை குப்பைகள் நிறைந்து பல்வேறு இடங்களில் வாறுகால்கள் சிதிலடைந்து கழிவு நீர் வெளியேறி இந்த நகர் மக்கள் குறிப்பாக குழந்தைகள் அன்றாடம் நோயின் பிடியில் சிக்கி தவிர்த்து வருகின்றார்கள்.இவை அனைத்தையும் மாற்றி அமைத்து இந்த நகரின் மேம்பாட்டிற்க்காகவே அனைத்து ஜமாத் சார்பாக அனைத்து சமூக மக்களையும் உள்ளடங்கிய வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றோம்.கீழக்கரை பொது மக்கள் கடந்த காலங்களில் நகர் மன்ற பிரதிநிதிகளால் பல்வேறு பாடங்களை பெற்று இருக்கின்றார்கள்.அனைத்து ஜமாத் வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெற செய்வார்கள்.இந்த வெற்றியின் மூலம் எங்கள் வாக்குறுதிகளை நகர் மன்றத்தோடு இணைந்து கீழக்கரை மக்களுக்காக அனைத்து ஜமாத் கூட்டமைப்பு செய்யும் என்றார்.இந்த சந்திப்பில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு செயலாளர் சேக் ஹுசைன்,நிர்வாகிகள் சதக் அப்துல் காதர்,இலியாஸ்,முகம்மது அஜிஹர்,சீனி இப்ராகீம்,சுபைர் ஆகியோர் உடனிருந்தனர்.