தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார் இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது .

1966 ம் ஆண்டு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தோற்றுவிக்கப்பட்ட தினமான நவம்பர் 16 ஆம் தேதி அன்று தேசிய பத்திரிகைகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு ஓவ்வொரு ஆண்டு தோறும் தேசிய பத்திரிகையாளர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது .

நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் செய்தியை சேகரிக்க தனது உயிரை பணிய வைத்து இரவும் பகலும் பாராமல் மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வரும் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் , கொலை மிரட்டல்கள் , படுகொலைகள் போன்ற சம்வங்களை தடுத்து உயிருக்கு எந்த வித அச்சுறுத்தல் இல்லாமல் பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செய்திகளை சேகரிக்க மத்திய , மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மென மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது .

உண்மையை நிலைநாட்டி தேசத்தையும் பாதுகாக்க அயராமல் உழைத்து கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் அணைவருக்கும் தேசிய பத்திரிக்கையாளர்கள் தின நல் வாழ்த்துக்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *