மாநில செயலாளராக தமிம் அன்சாரி நியமனம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.

கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் அவர்களின் பரிந்துரையின் படி தென்காசி மாவட்டம் , ஆனைகுளத்தை சேர்ந்த தமிம் அன்சாரி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில செயலாளராக இன்று முதல் 06-08-2021 நியமிக்கபட்டுள்ளார்.

பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் எனவும் கட்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும் எனவும் கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .

மேலும் மாநில செயலாளராக நியமிக்க பட்டுள்ள தமிம் அன்சாரிக்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறேன் . இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *