இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நிர்வாக கூட்டம் மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.நிகழ்வை தமுமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட அணி நிர்வாகிகளை நியமனம் செய்து மாநில தலைமைக்கு பரிந்துரை செய்து அனுப்பபட்டது. மேலும் வரும் சனிகிழமை மாவட்ட நிர்வாகம் சார்பில் தர்பியா முகாம் நடத்துவது என்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஏற்பாடு செய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட மமக செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் பரக்கத்துல்லா, மாவட்ட மமக துணை செயலாளர்கள் உபையதுல்லா,நிசார்,மாவட்ட தமுமுக துணை செயலாளர்கள் ஜாவித் அஸ்ஸாம்,சாகுல் ஹமீது மாவட்ட விவசாய அணி செயலாளர் ரைசுல் இஸ்லாம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அபுதாஹிர், ஆகியோர் கலந்து கொண்டனர்.