ஏழை எளிய நடுத்தர மக்களை அன்றாடம் பாதிக்கக்கூடிய பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்துவதை ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருப்பதை தமிழக மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது.இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய கொரோனாவால் நாடே கடந்த ஒரு வருடமாக அல்லோல பட்டிருக்கக் கூடிய சூழ்நிலையில் மக்களை ஏமாற்றக் கூடிய வகையில் ஒன்றிய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தின் மூலம் தொடர்ந்து வஞ்சித்து வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.இதனை சாமானிய மக்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கு ஒன்றிய அரசின் எண்ணை நிறுவனங்கள் நேர்மாறாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் எதிர்மறை போக்குடன் தொடர்ந்து விலையை உயர்த்தி வருவதை அன்றாடம் கவனிக்க முடிகிறது. இவ் விலை உயர்வின் மூலம் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் என ஒன்றிய அரசுக்கு தெரிந்திருந்தும் மக்களின் வாழ்வாதாரத்தின் மீது சிறிதும் கவலை கொள்ளாமல் விலை உயர்வை ஒன்றிய அரசு ஏனோதானோ என நினைத்து கண்டும் காணாமல் அதனை ரசித்துக் கொண்டிருப்பது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இனியும் இவ் விலை ஏற்றம் உயராமல் தடுக்க உடனே பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெற வேண்டும் .இவ் விலையேற்றம் தொடராமல் உடனே ஒன்றிய அரசு எண்ணெய் நிறுவனங்களோடு பேசி பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என தமிழக மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *