இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி சூழலில் தேர்போகி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் பனைக்குளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் திரு.ஸ்ரீமுக நாகலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கபசுரகுடிநீர் தயாரிக்கப்பட்டு ஊராட்சி மன்ற நிர்வாகமும், மாவீரன் அழகுமுத்துக்கோன் யாதவ இளைஞர் பேரவையும் இணைந்து கடந்த மூன்று நாட்களாக பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கினர்.
கடந்த மூன்று நாட்களாக நடந்த கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் திரு.நா.மோகன்குமார் அவர்களுடன் இணைந்து மாவீரன் அழகுமுத்துக்கோன் யாதவ இளைஞர் பேரவை தலைவர் திரு.த.சதீஷ்குமார் மற்றும் உறுப்பினர்களும், ஊராட்சிக்கு உட்பட்ட தன்னார்வலர்களும் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று கபசுரகுடிநீர் வினியோகம் செய்தனர்.