தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் தமிழின வேந்தர் டாக்டர் ஜான் பாண்டியன் அவர்களின் ஆணைக்கிணங்க கழகத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் டாக்டர் ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்களின் வழிகாட்டுதலின்படி இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு திருப்புல்லானி ஒன்றியம் சார்பாக கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் திருப்புல்லானி ஒன்றிய தலைவர் ராஜ கோபால் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் முனியசாமி, மாவட்ட தலைவர் ராஜசேகர்,மாவட்ட பொருளாளர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் மாவட்ட மகளிரணி தலைவி சொர்ணம்பாள், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணபாண்டியன்,ஒன்றிய இணைச் செயலாளர் கோவிந்தராஜ்,மாரிதாஸ் ஆரோக்ய பிரதீபன்,பொருளாளர் கண்ணன்,விவசாய அணி ஜெய்சங்கர், இளைஞரணி விஜய்,சக்தி,ஜெயக்கொடி உட்பட நிர்வாகிகள் பலருடன் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.