இராமநாதபுரம்,மார்ச்.08:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் சார்பில் 06.03.2022 அன்று பித்அத் ஒழிப்பு மாநாட்டுப்பணிகளை வீரியப்படுத்தும் நோக்கில் சிறப்பு செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டத் தலைமையகத்தில் நடைபெற்றது.மாவட்டத்தலைவர் J.M ஆரிப்கான் தலைமையில் நடைபெற்ற இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் “பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்?” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.மாநில செயலாளர் திருச்சி செய்யது அவர்கள் சமூக “ஊடகங்களில் நமது பணி”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.சுமார் 200 செயல்வீரர்கள் கலந்துகொண்ட இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சாபிர்,மாவட்ட துணைத்தலைவர் அய்யூப்கான்,மாவட்ட துணைச்செயலாளர்கள் கரீம் ஹக் சாஹிப்,யாசர் MISc,ரஜப்தீன்,தஸ்தக்கிர்,மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இறுதியாக மாவட்ட செயலாளர் தினாஜ்கான் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.