தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்ற சமூக நலக்கூட அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி தொகுதி MP கனிமொழி
மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்

அந்த மனுவில் காயலில் இயங்கும் ஆதார் இ.சேவை மையத்தில் ஊர் மக்கள் தினமும் டோக்கன் கிடைக்காமல் அவதிப்படும் சூழலையும், இதற்கு முன்பு காயல்பட்டினம் நகராட்சியிலும், ஊர் தபால் நிலையத்திலும் சேவை மையம் இயங்கி வந்த பொழுது மக்கள் ஆதார் சம்மந்தப்பட்ட அனைத்து தேவைகளையும் பெறுவதற்கு சிரமமின்றி பயன்படுத்தி வந்ததையும் விளக்கிக்கூறி மனுவையும் கொடுத்தனர்.

தற்பொழுது தினமும் வழங்கப்படும் 30-35 டோக்கன்களில், காயல் மக்களுக்கு மிக மிக சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கின்றது. காலை 6:30 முதலே சுற்று வட்டார மக்கள் வந்துவிடுவதால், காயலின் மக்கள் பயன் பெறமுடியாத நிலையே தொடர்கின்றது. இதனால், அதிக மன உளைச்சளுக்கு உள்ளாகின்றார்கள்..

ஆகையால், சுற்று வட்டார ஊர்களில் கூடுதல் ஆதார் இ-சேவை மையத்தை அமைக்கவும்,

அதைப்போல் ஆதார் சேவை மையங்களின் தேவை அதிகமாக உள்ளதால் இங்கு ஏற்கனவே நகராட்சியில் நடைபெற்று நிறுத்தப்பட்டுள்ள இ-சேவை மையத்தை நிரந்தரமாக மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கவும்,

ஏற்கனவே அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆதார் இ.சேவை மையத்தை நிரந்தரமாக, மீண்டும் இதற்குரிய தனி அலுவலருடன் செயலாக்கத்துக்கு கொண்டு வரவும்

துரிதமாக நடவடிக்கை எடுத்து மக்களின் இத்துயர் துடைக்க ஆவணம் செய்யுமாறு வேண்டுகோள் வைத்தனர்.

இச்சந்திப்பில் இளைஞர் ஐக்கிய முன்னணி நிர்வாகிகள்
சுல்தான் லெப்பை, செயலாளர் .செய்யிது முஹம்மது சாஹிப் ஆலிம், இணை செயலாளர் சொளுக்கு. AJ மற்றும் கண்டி சிராஜ், பொதுக்குழு உறுப்பினர் சாஹீல் ஹமீது, இளைஞர் அணி பொறுப்பாளர் கலீலுர் ரஹ்மான் உள்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *