இராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட காங்கிரஸ் சார்பாக தேவிப்பட்டினத்தில் இராமநாதபுரம் வட்டார தலைவர் கார்குடி சேகர் தலைமையில் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலையில் கடுமையாக உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டுகொள்ளாத,மக்களின் கொரோனா கால கஷ்ட நிலையை உணர்ந்து கொள்ளாத மத்திய அரசின் போக்கை கண்டித்து சைக்கிளில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சைக்கிள் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.இந்த ஊர்வலத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் தங்கராசு,நேரு,துரைப்பாண்டி, மாவட்ட துணைத்தலைவர்கள் கோபால்,பாஸ்கர சேதுபதி,கமருதீன்,துல்கீப்கான், செய்யது இப்ராகிம், தேவிபட்டிணம் நகர் தலைவர் அன்சாரி, இராமநாதபுரம் வட்டார மகளிரணி தலைவி சசிகலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.