இராமநாதபுரம் லைப் சேவர்ஸ் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா, பட்டய தினவிழா, சேவையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா சிறப்புடன் நடைபெற்றது. தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக டாக்டர் லயன் பரணிகுமார் அவர்களும் டாக்டர் வித்யா பிரியதர்ஷினி அவர்களும் கலந்து கொண்டனர். கொரானா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள், ஊழியர்கள் என சுமார் 75 நபர்களுக்கு சான்றிதழ்களும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் இணைத்து வைக்கப்பட்டனர். பட்டய தலைவர் ஏவி சதீஷ்குமார், கேபினட் செயலாளர் வி பி ராமகிருஷ்ணன், கேபினட் பொருளாளர் அபர்ணா வெங்கடாச்சலம், சங்கத்தின் செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் சதீஷ்குமார், பாவா மெடிக்கல் உரிமையாளர் லயன் முஹம்மது ரிஸ்வான் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர் இந்த விழா நிகழ்வில் ராமநாதபுரம் வசந்த நகர் பகுதியில் நகராட்சி வசமுள்ள பூங்காவினை தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகள் நட்டு, நல்ல முறையில் பராமரித்து வர ராமநாதபுரம் லைப் சேவர்ஸ் அரிமா சங்க சங்கத்திற்கு அனுமதி வழங்கிய நகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *