சென்னை தமிழக முஸ்லிம் ஜமாத் மற்றும் சுன்னத் ஜமாத் மாணவர் அமைப்பு (எஸ் எஸ் எப்) சார்பாக பசித்தோரின் பசியகற்றுவோம் என்னும் தலைப்பில் தினமும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் பொருட்டு அவர்களின் பசியைப் போக்க உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கொடிய கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்தை தொடர்ந்து அரசின் ஊரடங்கு உத்தரவால் உணவில்லாமல் தவிக்கும் சாலையோர மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தினமும் 250 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து 17 நாட்களாக கடந்த மே 29ம் தேதியிலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இலவச உணவு வினியோகம் நடைபெற்று வருகிறது.
இந்த அமைப்பின் சார்பில் முதற்கட்டமாக 10,000 நபர்களுக்கு மதிய உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
மதிய உணவு விநியோகத்திற்கு சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு மாநில தலைவர் கமாலுதீன் ஸகாஃபி, முஸ்லிம் ஜமாத் மாநில பொருளாளர் அஸ்ரப் ஹாஜி மற்றும் நாசர் சபியுல்லாஹ் தலைமையில் தொடர்ந்து இந்நாள் வரை இலவச மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.