ராமநாதபுரம், மே 13-

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் த.மு.மு.க., சார்பில் பொருள்கள் உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் ரம்ஜான் பண்டிகையை ஏழை எளிய மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் விதமாக தொண்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புத்தாடை, அரிசி, இறைச்சி உள்ளிட்ட பொருள்கள் சுமார் 300 குடும்பங்களுக்கும், மருத்துவ உதவியாக 5 நபர்களுக்கு தலா 5.000வீதம்வழங்கப்பட்டது. வாழ்வாதார உதவியாக 5நபர்களுக்கு 5000வீதம் வழங்கப்பட்டது . த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக் பாட்சா உதவிகளை வழங்கினார். நகர் தலைவர் காதர் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. த.மு.மு.க., மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி முன்னிலை வகித்தார் . ஒன்றிய தலைவர் பீர்முகம்ம்மது, ம.ம.க., செயலாளர் தொண்டிராஜ், ஒன்றிய பொருளாளர் முகம்மது அலி, .சிறப்பு அழைப்பாளர்கள் அப்துல்ரஹ்மான், விழுப்புரம் மாவட்ட செயலாளர் நசிர் . வர்த்தக அணி இனாமல் வடக்கு தெரு உறுப்பினர் நவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். த.மு.மு.க., செயலாளர் நவர், பேரூர் பொருளாளர் முகம்மது மைதீன், முகம்மது சபிர் அலி, மாவட்ட இளையோர் அணி நைனா முகம்மது, மாணவர் அணிஅன்சாரி, பரக்கத் அலி, ஜாஸ் மில்கான், பரஹத் ஜாபர் நிஸார் பாய், அப்துல் ரசாக், அகமது இப்ராஹிம், சுல்த்தான் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நலத்திட்ட உதவிகளை வழங்கிய த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக்பாட்சா த.மு.மு.க., சார்பில் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *