தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அந்தந்த யூனியனுக்குட்பட்ட ஊராட்சி அலுவலகங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.மேற்கண்ட பணிகளை இராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத் துறையினர் திறம்பட செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்றத் தலைவர் அக்பர்ஜான்பீவி தலைமையில் நடைபெற்றது.
மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பொதுமக்களை உடல் பரிசோதனை செய்து கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.எஸ்.டி.பிஐ. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரியாஸ்கான், ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.