மக்கள் சங்கமம் மாநாடு
கீழக்கரை பாப்புலர்/பிரண்ட் ஆ/ப் இந்தியா மக்களாட்சியை பாதுகாப்போம் என்னும் மக்கள் திரள் மாநாடு ஜூலை 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் மாநாட்டில் கருத்தரங்கம் பெண்களுக்கான வினா விடை போட்டி, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, மதரஸா மாணவர்களுக்கு கிராஅத் போட்டி, கீழக்கரையின் வரலாற்று கண்காட்சி, கீழக்கரையில் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் மூத்த ஆலிம்களுக்கு பொற்கிழி வழங்கும் கௌரவிப்பு நிகழ்ச்சிகளும், நடைபெறுவதாக மாநாட்டு குழு தலைவர் ஹமீது சாலிஹ் தெரிவித்தார்.
SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கீழை ஜஹாங்கீர் அருஸி, நகரத் தலைவர் அஹமது நதிர், மாநாட்டு பொறுப்பாளர் தாஜுல் அமீன்,ஹாஜா ஆசிக் மக்கள் தொடர்பாளர் அப்துல் காதர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்:சீனி இபுராஹிம்.
ஒளிப்பதிவாளர்: முகம்மது நிசார்.