தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் மண்டபம் மற்றும் புதுமடம் கிளைகள் சார்பில் 73வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மண்டபம் அரசு மருத்துவமனையிலும் புதுமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.மண்டபத்தில் மாவட்ட செயலாளர் J.Mஆரிப்கான் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை மண்டபம் அரசு மருத்துவமனை மருத்துவர் திரு.A.பாக்கியநாதன் அவர்கள் துவங்கிவைத்தார்கள்.
புதுமடத்தில் கிளை தலைவர் பஃரித் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட தலைவர் முகம்மது அயூப்கான் அவர்கள் துவங்கிவைத்தார்கள்.
இந்த இரண்டு முகாம்களிலும் மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்
இந்த இரண்டு முகாம்களில் பிறமத சகோதர, சகோதரிகள் உள்பட 55 நபர்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினார்கள்.
இந்த முகாமின் ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் நசுருதீன் அவர்கள் தலைமையில் இரண்டு கிளை நிர்வாகிகளும் சேர்ந்து சிறப்பாக செய்திருந்தனர்.