இராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி மன்றம் ஆக செயல்பட்டு வருகிறது ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் சித்ரா மருது ஊராட்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் பாரதி நகர் மீன் மார்க்கெட் நாகநாதபுரம் சாலை மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது.இந்த சாலையை சீரமைக்க மண்டபம் ஒன்றிய கவுன்சிலரும்,மண்டபம் மேற்கு ஒன்றிய அ.இ.அ.தி.மு.க கழக செயலாளர் மருதுபாண்டியனிடம் ஊராட்சி தலைவர் டாக்டர் சித்ரா மருது கோரிக்கை வைத்தார்.கோரிக்கையை ஏற்று ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து 207 மீட்டர் பேவர் பிளாக் சாலை பணி நடந்து வருகிறது.அந்த பணியை ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன் பார்வையிட்டார்.உடன் முன்னாள் அரசு வழக்கறிஞர் கருணாகரன்,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் டாக்டர் ஜெயகார்த்திகேயன்,செந்தமிழ் நகர் கிளை கழக செயலாளர் செந்தமிழ்ச் செல்வம், பட்டணம்காத்தான் ஊராட்சி துணைத்தலைவர் வினோத்,நகர் கூட்டுறவு வங்கி ஹவுசிங் போர்டு கார்த்தி,ஒப்பந்ததாரர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.