ராமநாதபுரம், நவ,24-

ராமநாதபுரத்தில் பா.ஜ., அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பாதையாத்திரை நிகழ்ச்சி நடந்தது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்தும், வேளாண் சட்டத்தை இரு அவைகளிலும் ரத்து செய்ய வலியுறுத்தியும், பொது துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கண்டித்தும்,உரம் மானியத்தை வழங்க கோரியும் இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும் வலியுறுத்தியும் இராமநாதபுரம் அரண்மனையிலிருந்து நகரின் முக்கிய வீதிகளில் பதாகைகள் ஏந்தி பாதயாத்திரை செல்லும் கண்டன போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் மயூரா ஜெயகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் பினுலால் சிங், ஆகியோர் கண்டன பாதயாத்திரையை துவக்கி வைத்து அவர்களும் குரல் எழுப்பியவாறு முக்கிய வீதிகளில் நடந்து சென்று மத்திய அரசின் மக்கள் விரோத செயல்கள் என உரக்க குரல் எழுப்பி சென்றனர். இராமநாதபுரம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்லது்துரை அப்துல்லா, திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், நகர் தலைவர் கோபி,நகர் துணை தலைவர் ஜெயகுமார், வட்டார தலைவர் காருகுடி சேகர், செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம் உட்பட பலர் பாதயாத்திரையில் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பியவாறு சென்றனர். பாதயாத்திரை அரண்மனையில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று அரண்மனையில் முடிவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *