மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில பொது செயலாளராக Dr எம்.அக்பர் கான் , மாநில பொருளாளராக டில்லி பாஸ்கர் ஆகிய இருவரையும் நியமித்து இக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் சென்னை , வளசரவாக்கம் , இராமசாமி தெருவை சேர்ந்த Dr எம்.அக்பர் கான் மாநில பொது செயலாளராகவும் , திருவள்ளூர் மாநகரம், பெருமாள் செட்டி தெருவை சேர்ந்த டில்லி பாஸ்கர் மாநில பொருளாளராகவும் இன்று முதல் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியில் நியமிக்கபட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டும் கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் எனவும்
பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அனைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .

மேலும் தாங்களின் சமூக பணி சிறக்க எனது மன மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *