த.மு.மு.க,ம.ம.க அலுவலகம் திறப்பு த.மு.மு.க கொடியேற்றம் மற்றும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்ததான முகாம் நிகழ்வை மமக மாவட்ட துணை செயலாளர் நிசார் தலைமையேற்று நடத்தினார்.S.p.பட்டிணம் கிளை த.மு.மு.க செயலாளர் அசாருதீன் வரவேற்றார்.த.மு.மு.க,ம.ம.க மாவட்ட தலைவர் பட்டாணி மீரான்,த.மு.மு.க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிஃப்ரி, ம.ம.க மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன்,த.மு.மு.க,ம.ம.க மாவட்ட பொருளாளர் பனைக்குளம் பரக்கத்துல்லா த.மு.மு.க மாவட்ட துணை செயலாளர் முகம்மது அலி ம.ம.க மாவட்ட துணைசெயலாளர் உபைதுல்லாஹ்,திருவாடனை ஒன்றிய த.மு.மு.க தலைவர் பீர்முகம்மது,ம.ம.க ஒன்றிய செயலாளர் தொண்டிராஜ்,உலாம அனி நைய்னாமுகமது,அன்சாரி  நைனா,நசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக s.p.பட்டிணம் கிளை அலுவலகத்தை ஜமாத் தலைவர் ஹசன் அலி ஆலிம் திறந்து வைத்தார்கள்.இந்நிகழ்வில் ம.ம.க மாநில துணை பொது செயலாளர் மதுரை கௌஸ்,த.மு.மு.க மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா,சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இரத்த தான முகாமை துவக்கி வைத்து த.மு.மு.க கொடியேற்றி  சிறப்புரையாற்றினர். திருவாடானை ஒன்றிய பெருந்தலைவர் முகமது முக்தார் வாழ்த்துரை வழங்கினார்.இந்த இரத்ததான முகாமில் 60-க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்தனர்.கிளை தலைவர் பசீர் அலி நன்றியுரையாற்றினார்.
நிகழ்வை சகுபர் சாதிக்,கலந்தர் பகுருதீன்,முகமது அலி ஜின்னா, அசாருதீன்,அகமது ஜலால், சிராஜுதீன்,அப்துல் காதர் ஜெய்லானி,ஹாஜி முகமது, ஜாவித்,சேக் மன்சூர் இபுராஹிம் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *