ராமநாதபுரம் பேராவூர் கிராமத்தில் இந்திய முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் மாமன்னர் அழகு முத்துக்கோன் 264 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது மாவீரன் அழகுமுத்துக்கோன் யாதவர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சர்க்கரை பொங்கல் இட்டு அவரது திரு உருவ புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை முதியோர் சங்கம் மகளிர் மன்றம் இளைஞர் சங்கம் மாவீரன் அழகுமுத்துக்கோன் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து ஊர் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினர் இந்நிகழ்ச்சிக்கு ஊர் தலைவர் சந்தனம் முன்னிலை வகித்தார் மற்றும் மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவர் இளைஞர் நற்பணி மன்ற ஆலோசகர் ஆறுமுகம் தலைவர் பாலா உப தலைவர் சுந்தர் செயலாளர் மணிகண்டன் பொறுளாளர் ஹரிதாஸ் தண்டல் மகேஷ் மகளிர் மன்ற தலைவி லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *