நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேசன் சார்பில் தேசிய தலைவர் டாக்டர்.அப்துல் ரசாக் மற்றும் மாநில பொருளாளர் சிவசங்கரன் ஆகியோர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தனர்.தொடர்ந்து புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழை உதவி ஆசிரியர் பாதுஷா மற்றும் பொது செயலாளர் அஜ்மல் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினர். புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழில் மக்கள் சார்ந்த மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் செய்திகள் வெளிவருவது குறித்து புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் ஆசிரியர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கூறினார். மாவட்ட ஆட்சித்தலைவர் புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழுக்கு வாழ்த்துக்கள் கூறினார்.தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் அவர்களையும் புலனாய்வு எக்ஸ்பிரஸ் ஆசிரியர் தலைமையில் நேரில் சந்தித்து புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.உதவி ஆசிரியர், செய்தியாளர்கள் அனைவரையும் கூடுதல் ஆட்சியரிடம் ஆசிரியர் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி போட விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூடுதல் ஆட்சியர் சேவையை செய்தியாளர்கள் பாராட்டி வாழ்த்தினர். கூடுதல் ஆட்சியர் மக்கள் சேவையை இணைந்து செய்வோம் என ஆசிரியர் உள்ளிட்ட அனைவரிடமும் கூறி செய்தியாளர்கள் பணி சிறந்த பணி என வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் அஜ்மல், மாவட்ட தொடர்பு அலுவலர் கார்த்திக் பாலா,துணை செயலாளர் பால்சாமி (எ) பாதுஷா, மணிகண்டன்,எம்.கார்த்திக், மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.