இராமநாதபுரத்தில் அல்லி கண்மாய் சுடுகாடு 10 ஆண்டுகளுக்கு முன்பு மின்மயானம் ஆக மாற்றப்பட்டது அதன்பின் சிறிது காலம் ஒழுங்காக இயங்கிவந்த மின் தகனமேடை பழுதடைந்தது பழுது அடைந்து நீண்ட காலமாகியும் மின் தகன மேடை இயங்கவில்லை அணை செயல்முறை படுத்த நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பயோ கேஸ் மூலம் தகனமேடையை செயல்படுத்த தொடங்கினர்.பயோ கேஸ் மூலம் உடல்களை எரிக்கும் போது ஒரு உடலுக்கு நான்கு மணி நேரம் வரை எடுத்து வருகிறது அதே நிலையில் மின் தகன மேடை என்றால் சில நிமிடங்களில் உடல் எரியூட்டப்படும் மேலும் பயோ கேஸ்ஸால்  உடல் எரிக்கப்படும் போது வெளிவரும் துர்நாற்றம் புகை இவற்றால் அந்தப் பகுதியில் குடியிருந்து வரும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.மேலும் சுடுகாட்டில் உடல்களை புதைக்கும் பகுதியில் இப்போது உடல்களைப் புதைக்கக் அனுமதிப்பதில்லை அப்பகுதியை பொதுமக்கள் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி குடியிருந்து வருகின்றனர்.மேலும் அப்பகுதி முழுவதும் காட்டு முள் செடிகள் நிறைந்தும் மருத்துவ கழிவுகளை கொட்டியும் சுகாதார சீர்கேட்டின் உச்சத்திற்கே சென்றுள்ளது இதனை சுத்தப்படுத்த நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக இராமநாதபுரம் அள்ளிக் கண்மாய் சுடுகாட்டை நகராட்சி நிர்வாகம் உடனடியாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நகர மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *