இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்று கபசுர குடிநீர் 800 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர் கனி அவர்கள் தலைமை வகித்தார்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் கபசுர குடிநீர் வழங்கினர்.
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.