இராமநாதபுரம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலக வாயிலில் அரசு மதுக்கடைகளை திறந்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மது பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை தாங்கிய வண்ணம் கட்சி கொடி மற்றும் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொரோனா காலத்தில் மதுக்கடைகளை திறந்த தமிழக அரசை கண்டித்தும் மதுவினால் பொது மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும் கோஷமிட்டனர். நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நகர செயலாளர் வெங்கடேசன் மண்டபம் ஒன்றிய செயலாளர் பனைக்குளம் ராவுத்தர் கனி இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில். மாவட்ட அமைப்பு செயலாளர் ஆடிட்டர் சதாம் உசேன்.ஆகிய பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.அதேபோல் அனைத்து பொறுப்பாளர்களும் அவரவர்கள் வீட்டில் பதாகையை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட பொருளாளர் ஆயிஷா அவரது வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்து முடித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *