இராமநாதபுரம்,ஜீன்.01:-
சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மோடி அரசு.ஜூன் 01ல் வீடுகள் தோறும் நமது எதிர்ப்புகளை பதிவு செய்வோம்!இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் எம்.ஐ.நூர் ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடு பெருந்துன்பத்தில் தவித்துக் கொண்டிருக்கும் பெருந்தொற்றுக்கு நடுவே,தனது மோசமான ஆட்சி நிர்வாகத்தால் நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கும் மோடி அரசு,அதனை திசைதிருப்பும் வகையில்,சிஏஏ எனும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தங்களின் ஆட்சி நிர்வாகத் தோல்வியை மறைக்க குடியுரிமை போன்ற சர்ச்சைக்குரிய விசயங்களை தூண்டும் மத்திய அரசின் இந்த அபத்தமான நடவடிக்கைகளுக்கு எதிராக,ஜூன் 01 இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தங்கள் வீடுகளில் பதாகைகள், சுவரொட்டிகளை ஏந்தி,சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக மாவட்டத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. மேலும், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து இணையவழி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.