ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையையும்,32 சதுர கிலோமீட்டர் நிலப் பரப்பையும் கொண்டது லட்சத்தீவு. இந்திய ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியாக உள்ளது. லட்சத்தீவில் துணைநிலை ஆளுநர் கிடையாது. அங்கு தலைமை பொறுப்பில் அரசு நிர்வாகம் செயல்படும் .அங்கு தலைமை பொறுப்பில் இருந்த தினேஷ் சர்மா கடந்த டிசம்பர் மாதம் காலமானதை அடுத்து பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அம்மாநிலத்தில் உள்துறை இணை அமைச்சராக இருந்த பிரபுல் கோடா பட்டேல் லட்சத்தீவின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டார். நியமனம் செய்யப்பட்டதில் இருந்து தொடர்ந்து அம்மக்களுக்கு எதிரான புதிய சட்டங்களை எல் டி ஏ ஆர்,பி ஏ எஸ் ஏ, டிபிஎன், எல் ஏ பி ஆர் இதுபோன்ற சட்டங்களை அமல்படுத்தி துன்புறுத்துவதிலும், மன உளைச்சலை ஏற்படுத்துவதிலும், பிரிவினை படுத்துவதிலும், அம்மக்களை சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. லட்சத்தீவு மக்களுக்கு எதிரான பல புதிய சட்டங்கள் மூலம் அம்மக்களை துன்புறுத்தும் பிரபுல் கோடா பட்டேலை நியமனம் செய்த மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதுடன், உடனே காலதாமத படுத்தாமல் பிரபுல் கோடா பட்டேலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *